எரிபொருள் வரிசையைக் கட்டுப்படுத்த இலங்கையில் புதிய ஏற்பாடு!
இலங்கையில் QR குறியீட்டு முறைமையின்கீழ் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு நாளை (19) முதல் புதிய நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது.
வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் வழங்கப்படவுள்ளது.
இதற்கமைய வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண்ணாகவோ அல்லது ‘0’ ஆகவோ இருந்தால் (0, 2, 4, 6, 8) இரட்டை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெறலாம். (உ+ம் 20,22 )
இறுதி இலக்கம் ஒற்றை எண்ணாக இருந்தால் ஒற்றை எண்கள் (1, 3, 5, 7, 9) ஒற்றை இலக்க திகதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. (உ+ம் 21,23 )
எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசைகள் தோற்றம்பெற்றுள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவதற்காகவே புதிய நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது.





