வடக்கில் மஹிந்த செய்ததை அநுரவால் ஏன் செய்ய முடியவில்லை?
“போரை முன்னெடுத்த மஹிந்த ராஜபக்சவால் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியுமென்றால் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்ற அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் TPA, நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் Mano Ganesan கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.
“மஹிந்த ராஜபக்சவே போரை முன்னெடுத்தார். இதனால் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடும் விமர்சனம் இருந்தது. மக்கள் தம்மை விமர்சித்தபோதிலும் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏன்?
ஜனாதிபதி வடக்குக்குச் செல்கின்றார். சுதந்திரமாக நடக்கின்றார். செல்பி எடுக்கின்றார். இது நல்ல விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது.
இப்படி மக்கள் ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது. இதுதான் எனது கேள்வி. இந்த கேள்வி நியாயமானதுதானே” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.





