போர் பதற்றம்: சென்னை திரும்பிய அஜித்!
துபாயில் இருந்து நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் துபாயில் தங்கியிருந்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டதால், சென்னை திரும்ப முடியாமல் அவர் துபாயில் சிக்கிக்கொண்டார்.
இந்நிலையில், துபாயில் இருந்து அஜித் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்துள்ளார். இது குறித்த காணொளிகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.





