வவுனியா புளியங்குளத்தில் விபத்து – ஒருவர் பலி
வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று நள்ளிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றையவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்
குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய நபர் ஒருவரேடி குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





