ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வெளியேற்றும் பிரித்தானியா!
ஈரானில் உள்ள அனைத்து ஊழியர்களையும் இங்கிலாந்து தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளது.
மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை காரணம் காட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களுக்கு உதவுவதற்கான அதன் திறன் இப்போது கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நேரில் தூதரக ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை என்றும் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




