மணல் கடத்தல்: உழவு இயந்திரம்மீது STF துப்பாக்கிச்சூடு! சாரதி தப்பியோட்டம்!
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம்மீது விசேட அதிரடிப்படையினர் STF துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியிலேயே நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமான முறையில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் செல்லப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை, விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
எனினும், சமிக்கையை மீறி அவை சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
உழவு இயந்திர சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய உழவு இயந்திர சாரதி தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.






