அரசியல் இலங்கை செய்தி

பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு முதுகெலும்பில்லை: மஹிந்த அணி கொக்கரிப்பு!

“ உரையாடலில் பங்கேற்று நாமல் ராஜபக்கவிடம் கேள்வி எழுப்புவதற்குரிய முதுகெலும்பு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் வீரசேகர முன்வைத்தார்.

“ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் என்பவற்றிடமிருந்து நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கருத்து சுதந்திரம் மற்றும் விவாத உரிமை என்பனவே மேற்படி பல்கலைக்கழகங்களின் பிரதான அம்வசம்.
எனினும், தமிழ் பிரிவினைவாத குழுக்களின் அழுத்தங்களால் குறித்த உரிமை, கலாசாரம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் போன்ற பல்கலைக்கழகங்களின் நற்பெயருக்கு நல்லதல்ல.
நாமல் ராஜபக்சவிடம் கேள்வி கேட்டகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழ் மாணவ அமைப்புகள் தயாரில்லை.

பின்னர் கேள்விகளை எழுத்துமூலம் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால்தான் உரையாடல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்சவிடம் தற்துணிவுடன் கேள்வி கேட்பதற்குரிய முதுகெலும்பு பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது.” எனவும் வீரசேகர குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!