அறகலயவுக்கு ராஜபக்சக்களே ஆரம்பபுள்ளி வைப்பு!
அமைதியாக நடந்த அறகலயமீது தாக்குதல் நடத்தி குழப்பம் ஏற்படுவதற்கு ராஜபக்ச தரப்பே ஆரம்பபுள்ளி வைத்தது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க Wasantha Samarasinghe தெரிவித்தார்.
“ அமைதியாக நடைபெற்ற போராட்டம்மீது ராஜபக்ச தரப்பு தாக்குதல் நடத்தியதாலேயே அறகலய வெடித்தது.
எனவே, குழப்பம் ஏற்பட்ட பின்னர் நடந்த சம்பவங்களைபோன்ற, அதற்கு முன்னர் இடம்பெற்றவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
எவரேனும் குற்றம் இழைத்திருந்தால் நீதிமன்றம் தண்டனை வழங்கும். அது தொடர்பில் பிரச்சினை இருந்தால் மேன்முறையீடு செய்யலாம்.
நீதிமன்றத்தில் இருக்கும் விடயம் தொடர்பில் நீதிமன்றம் ஊடாகவே தீர்வு எட்டப்பட வேண்டும்.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.





