இங்கிலாந்து முழுவதும் கொட்டி தீர்க்கும் பனி : மக்களின் கவனத்திற்கு!
ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து முழுவதும் கடுமையான பனிப்பொழிவிற்கான இரண்டு மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வானிலை மையத்தின் அறிவிப்பிற்கு அமைய இன்று பனிப்பொழிவு கடுமையாக இருக்கும் என்றும், இரவு முழுவதும் வெப்பநிலை குறைந்து குளிராக இருக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
குறித்த வானிலை மாற்றமானது நாளை தினத்திற்கும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதீத பனிப்பொழிவால் ஏற்படும் ஆபத்தான நிலைமைகள் குறித்தும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





