செயலிழந்த கணினி அமைப்பு முழுமையாக மீட்பு – கடவுச்சீட்டு சேவைகள் வழமைக்கு!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் இப்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்தார்.
இதற்கமைய பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும், அனைத்து பிராந்திய கிளைகளிலும் அவசர மற்றும் அத்தியாவசிய கோரிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.





