உலகம்

கனடாவையும் – அமெரிக்காவையும் இணைக்கும் பாலத்தை திறக்க விடமாட்டேன் : ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் புதிய பாலம் திறக்கும் நடவடிக்கையை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ (Ontario) மாகாணத்தையும் அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தையும் இணைக்கும் புதிய பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பாலத்தில் குறைந்தபட்சம் பாதியையாவது சொந்தமாக்கிக் கொள்ளும் முனைப்பில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.  இதற்கமைய ட்ரம்ப் மேற்படி அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

4.7 பில்லியன் பொருட் செலவில் நிர்மாணிக்கப்படும் குறித்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு கனடாவில் பிறந்த மறைந்த தேசிய ஹாக்கி லீக் ஜாம்பவான் கோர்டி ஹோவின் (Gordie Howe) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பாலமானது இவ்வாண்டில் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், பாலத்தின் இருபுறமும் கனடாவுக்குச் சொந்தமானது என்றும், அதைக் கட்டுவதற்கு “கிட்டத்தட்ட” எந்த அமெரிக்க தயாரிப்புகளையும் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆகவே அதற்கான இழப்பீட்டை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்த அவர், அதனை கனடா பெற்றுக்கொள்ளும் வரை பாலத்தை திறக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!