நாடாளுமன்றில் நாமலை கிழித்து தொங்கவிட்ட பெண் எம்.பி.!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சமீது Namal Rajapaksa , நாடாளுமன்றத்தில் கடும் விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார் ஆளுங்கட்சி எம்.பியான லக்மாலி lakmali hemachandra
இனவாத அரசியலை முன்னெடுக்கும் கூட்டம் எனவும் அவர் விமர்சித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய லக்மாலி எம்.பி. கூறியவை வருமாறு,
“ இனத்துக்காகவும், மதத்துக்காகவும் முன்னிலையாகும் அரசியல்வாதி தான்தான் என காட்டிக்கொள்வதற்கு நாமல் ராஜபக்ச முற்படுகின்றார்.
தெற்கில் வாக்குகேட்டு சிங்கள மக்களின் ஆதரவுடன் நாடாளுமன்றம் வருவதற்கு தற்துணிவற்ற நபரே இன்று வீரவசனம் பேசி அழைக்கின்றார்.
மக்களைப் பற்றி கதைப்பதற்கு இவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. நாட்டை நாசமாக்கிய கூட்டமே தற்போது இனவாத அரசியலை முன்னெடுக்க முற்படுகின்றது.
சிங்கள், பௌத்த மக்கள் நேர்மையானவர்கள். ஆனால் சிங்கள, பௌத்த மக்கள் எனக் காட்டிக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகளே ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர்.
இனவாதத்துக்கு இனி இடமில்லை. நாமலின் இனவாத அரசியல் இனியும் எடுபடாது.”என்றார்.





