சௌமியமூர்த்தி தொண்டமான் தேசிய தலைவர்: ராதாகிருஷ்ணன் புகழாரம்!
“சௌமியமூர்த்தி தொண்டமான் Soumyamoorthy Thondaman என்பவர் தேசிய தலைவர்களுள் ஒருவர். எனவே, அரச நிறுவனங்களுக்கு அவரது பெயரைவைக்ககூடாது எனக் கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் V. Radhakrishnan தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (05) உiயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ சௌமியமூர்த்தி தொண்டமான் என்பவர் இந்நாட்டின் ஓர் அடையாளம். தேசியத் தலைவர். அதனால்தான் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு தேசிய தலைவரின் ஞாபகார்த்தமாக அரச நிறுவனத்துக்கு அவரது பெயரை வைத்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல.
அவர் மலையக மக்களுக்கு பல சேவைகளைச் செய்துள்ளார்.
மன்றங்களில் மோசடி நடந்தால் அது பற்றி விசாரியுங்கள். ஆனால் நினைவு பெயர் வைக்ககூடாது என கூறுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.” – என்றார்.
தொண்டமான் தொழில்பயிற்சி நிலையம் தொடர்பில் அண்மையில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





