போட்டி புறக்கணிப்பை உறுதிப்படுத்தினார் பாகிஸ்தான் பிரதமர்!
ICC T-20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் Pakistan புறக்கணிக்கும் என அந்நாட்டு பிரதமர் Shahbaz Sharif உறுதிப்படுத்தியுள்ளார்.
பங்களாதேசுக்கு Bangladesh ஆதரவளிக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
பங்களாதேஷ் அணிக்கு பதிலாக உலகக்கிண்ண தொடரில் ஸ்கொட்லாந்து அணி இணைக்கப்பட்டதற்கும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
T20 உலகக்கிண்ண தொடர் நாளை மறுதினம் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் மார்ச் 8 ஆம் திகதிவரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக T20 உலகக் தொடர்பில் விளையாட இந்தியாவுக்கு வருவதற்கு பங்களாதேஷ் அணி மறுப்பு தெரிவித்தது.
இலங்கையில் விளையாட ஐசிசியிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஐசிசி மறுத்து அதற்குப் பதிலாக ஸ்கொட்லாந்தை உலகக் கிண்ணத்தொடரில் இணைந்தது.





