அரசியல் இலங்கை செய்தி

தீவிர அரசியலுக்கு விடை கொடுத்தார் மைத்திரி! 

தான் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன Maithripala Sirisena தெரிவித்தார்.

“தற்போது நான் எந்தவொரு கட்சியிலும் அங்கம் வகிக்கவில்லை. அரசியல் நடவடிக்கையில் பங்கேற்கவும் இல்லை.

எவரேனும் நாட்டுக்கு நன்மை செய்தால் அது தொடர்பான நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றேன்.” எனவும் அவர் கூறினார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி SLFP ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்தவர் மைத்திரிபால சிறிசேன.

2014 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றவர்.

ஜனாதிபதியாக பதவி வகித்த பின்னரும் 2020 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் தெரிவானார்.

அரகலயவின் பின்னர் அரசியல் ரீதியில் மைத்திரி அநாதையாக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றிபெறவில்லை.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!