இந்திய பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!
இந்தியாவின் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வரவு- செலவுத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
பாதீட்டு தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் (இந்திய ரூபா) முன்மொழியப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கைக்கான உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்காக 3 பில்லியன் இந்திய ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.
பூட்டானுக்கே அதிகளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.





