சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் 19,975 பேர் கைது
குடியிருப்பு, வேலை மற்றும் எல்லை பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஒரு வாரத்தில் 19,975 பேரை சவூதி(Saudi) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குடியிருப்பு சட்டங்களை மீறியதற்காக மொத்தம் 12,906 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் 3,918 பேர் சட்டவிரோத எல்லை கடக்க முயற்சித்ததற்காகவும் 3,151 பேர் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சவூதி அரேபியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதற்காக 1,716 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 60 சதவீதம் பேர் எத்தியோப்பியர்கள், 39 சதவீதம் பேர் யேமன் நாட்டினர் மற்றும் 1 சதவீதமானோர் பிற நாட்டினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




