இந்தியா

அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு!

விமான விபத்தில் பலியான மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் Ajit Pawar இறுதிச் சடங்கு இந்திய நேரப்படி இன்று (29) முற்பகல் நடைபெறவுள்ளது.

பாராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்தான் திடலில் இடம்பெறவுள்ள இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது.

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் பயணம் செய்த சிறிய ரக விமானம் நேற்று பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது
.
அஜீத் பவார், விமானிகள் உட்பட ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அஜீத் பவாரின் சொந்த தொகுதியான பாராமதியிலேயே இன்று முற்பகல் 11 மணியளவில் அவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், மாநில அரசு கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, பாராமதி விமான நிலையத்தில் இந்திய விமானப் படை அதிகாரிகள் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!