அவகாசம் கோரிய ஷிரந்தி ராஜபக்சவுக்கு அரசு வழங்கியுள்ள அறிவுரை!
“சட்டத்தை மதித்து செயல்பட வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு Shiranthi Rajapaksa உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்றது.
இதன்போது பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் FCID பிரிவில் முன்னிலையாவதற்கு ஷிரந்தி ராஜபக்ச இரு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் கூறியவை வருமாறு,
“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரே ஷிரந்தி ராஜபக்ச. அவர் இந்நாட்டில் முதல் பெண்மணியாக இருந்தவர். சிறார் பாடசாலையை வழிநடத்துபவர்.
எனவே, உரிய வகையில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது. சட்டத்தை மதித்து செயல்பட வேண்டும்.” – என்றார்.





