ஐரோப்பா

சுவிட்சர்லாந்து தீவிபத்து சம்பவம் : விடுதி உரிமையாளரின் விடுதலையை கடுமையாக எதிர்க்கும் இத்தாலி!

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்தில் இடம் பெற்ற தீவிபத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் “லெ கான்ஸ்டெல்லேஷன்”  (Le Constellation) என்ற மதுபானக் கடையின் உரிமையாளர் ஜாக் மோரெட்டி (Jacques Moretti) கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.  இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை இத்தாலி கடுமையாக சாடியுள்ளது.

இந்த தீ விபத்தில் 06 இத்தாலியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்திருந்தனர்.

ஜாக் மோரெட்டியை (Jacques Moretti)  நிபந்தனையுடன் விடுவிக்க சுவிஸ் நீதிமன்றம் எடுத்த முடிவு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு “கடுமையான அவமானம்” மற்றும் வேதனையை அளிப்பதாக இத்தாலி  தெரிவித்துள்ளது.

“கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள லு கான்ஸ்டெல்லேஷனின் உரிமையாளர் ஜாக் மொரெட்டியின் விடுதலை செய்தியால் நான் கோபமடைந்தேன்” என்று பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “புத்தாண்டு தின சோகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அவமானமாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு அவமானமாகவும் நான் கருதுகிறேன். இத்தாலிய அரசாங்கம் சுவிஸ் அதிகாரிகளிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதிமன்றத்தின் தீர்ப்பு “ஒரு கடுமையான குற்றத்தை” பிரதிபலிக்கிறது என்றும் இது தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான மற்றொரு காயத்தை ஏற்படுத்துகிறது என்றும் விமர்சித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!