இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (05) கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இன்று இரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, 07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் 08 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்களுக்கு கடுமையான மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.





