உலகம் செய்தி

மெக்சிகோ ஜனாதிபதியை தகாத முறையில் தொட்ட ஒருவர் கைது

மெக்சிகோவில்(Mexico) ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமை(Claudia Sheinbaum) தகாத முறையில் தொட்டதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுக் கல்வி அமைச்சகத்தில் நடந்த ஒரு நிகழ்விற்கு முன்னதாக, 63 வயதான கிளாடியா ஷீன்பாம், பொது மக்களுக்கு மத்தியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது பின்னால் இருந்து ஒரு நபர் அவரை அணுகியதாக எல் யுனிவர்சல்(El Universal) மற்றும் எல் சோல் டி மெக்ஸிகோ(El Sol de Mexico) செய்தி வெளியிட்டுள்ளன.

தேசிய அரண்மனைக்கு வெளியே நடந்த சம்பவத்தில், அந்த நபர் கூட்டத்திலிருந்து வெளியே வந்து கிளாடியா ஷீன்பாமை முத்தமிட முயற்சித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த நபருக்கு “முத்தம், தொடுதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பாலியல் வன்கொடுமை தண்டனைச் சட்டத்தின்படி 1 முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்” என்று மெக்சிகன் பத்திரிகையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!