இலங்கையில் இறக்குமதி அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபை தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் எடுக்கப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், இந்த விலை திருத்தங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நாட்டரசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவின் அதிகபட்ச விலை 240 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கீரி பொன்னி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 255 ரூபாவாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.