ஐரோப்பா

பிரான்ஸில் திடீர் சூறாவளி – ஒருவர் பலி, பலர் படுகாயம்!

பிரான்ஸின் பாரிஸ் (Paris) அருகே உள்ள வால்-து-வாஸ் (Val-d’Oise) மாவட்டத்தில் தாக்கிய பயங்கர சூறாவளி (Tornado) பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூறாவளியில் சிக்கி 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்தனர்.

எர்மோ நகரில் கட்டுமானப் பணியில் இருந்த மூன்று ராட்சத கிரேன்கள் சரிந்தன, பல வீடுகளின் கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன.

அதிகாரிகளால் எதிர்பாராத, மிகவும் குறுகிய மிகத்தீவிரமான வானிலை நிகழ்வு  என இது விவரிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு 80 தீயணைப்பு வீரர்கள், 50 காவல்துறையினர் உள்ளிட்டோர் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

நெடுஞ்சாலைகளிலும் தொடருந்து சேவைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 7 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்