செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இலங்கை அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

இன்று ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 18வது போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்த வகையில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி 12 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு மழை நின்றதால் நடுவர்கள் DLS (Duckworth–Lewis–Stern) முறையில் போட்டியை 20 ஓவர்களாக குறைத்தனர்.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து, 106 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 14.5 ஓவர்களில் இலக்கை அடைந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீராங்கனைகளான வோல்வோர்ட் (Wolvaardt) 60 ஓட்டங்களும் தஸ்மின் பிரிட்ஸ் (Tazmin Brits) 55 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

புள்ளி பட்டியலின் படி, தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று இரண்டாம் இடத்திலும் இலங்கை அணி 5 போட்டிகளில் எவ்வித வெற்றியும் இன்றி ஏழாவது இடத்திலும் உள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!