இலங்கை

இலங்கையில் முதல் முறையாக 22 கரட் தங்கத்தின் விலை 300000 தொட்டது!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்ததன் காரணமாக, உள்ளூர் சந்தையில் 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்டின் விலை இன்று (08) வரலாற்றில் முதல் முறையாக  300,000 ஐ தாண்டியுள்ளது.

உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றமே இந்த அதிகரிப்பிற்கு காரணமாகும். இதற்கமைய நாட்டில் நேற்று  290,500 ரூபாயாக  இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று காலை  296,000 ரூபாயாக ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், இன்று மூன்று முறை தங்கத்தின் விலை அதிகரித்தது, தற்போது வரை கொழும்பு ஹெட்டிவீதி சந்தை தரவுகளுக்கு அமைய  22 கரட் தங்கத்தின் ஒரு பவுண்டு விலை  303,400 ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், நேற்று  314,000 ரூபாயாக  இருந்த   24 கரட் பவுண் ஒன்றின் விலை    இன்று மாலை 328,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்