பிரேசிலில் மெத்தனால் விஷத்தால் மூன்றாவது நபர் உயிரிழப்பு
பிரேசிலின் சாஹோ பாலோவில் (São Paulo) மெத்தனால் விஷத்தால் 30 வயதுடைய புருனா அராஜோ டி சௌசா என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த வாரம் வோட்கா (Vodka) பானம் அருந்திய பிறகு இரண்டு ஆண்கள் மெத்தனால் விஷத்தால் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து 11 வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 10,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கலப்படம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதுகாப்பு முத்திரைகள் அல்லது வரி முத்திரைகள் இல்லாத பானங்கள் அருந்துவதை தவிர்க்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெத்தனால் என்பது துப்புரவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை மரச்சாராயம் ஆகும்.
மெத்தனால் விஷத்தின் அறிகுறிகள் உடல்சோர்வு போலவே இருக்கும், அதாவது ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறிந்து கொள்வது கடினமாக இருக்கும்.





