முடிவுக்கு வரும் இஸ்ரேல் – காசா போர்? டிரம்பின் முக்கிய திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முக்கிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது திட்டத்தை முன்வைப்பார் என தெரிவிக்கப்படுகின்நது.
சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் இந்த திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
மேலும் அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் பெரிதும் அழிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தின் எதிர்காலம் குறித்து விவாதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நியூயோர்க்கில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) கூட்டத்துடன் இணைந்து இந்த சந்திப்பைப் பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
காசா திட்டம் இஸ்ரேலால் வரைவு செய்யப்படவில்லை, ஆனால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் விவரங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த சிறப்புக் கூட்டத்தில், எதிர்காலத்தில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் எவ்வாறு விலகலாம், பிராந்தியத் தலைவர்கள் அமைதியைப் பேண துருப்புக்களை எவ்வாறு அனுப்ப வேண்டும் என்று அவர் விரும்புகிறார், மறுகட்டமைப்பு செயல்முறையை எவ்வாறு தொடங்கலாம் மற்றும் நிதி பெறலாம் என்பது குறித்து ஜனாதிபதி டிரம்ப் விவாதிப்பார்.
தற்போது, பிரித்தானியா, கனடா, போலந்து மற்றும் பிரான்ஸ் உட்பட 193 ஐ.நா. உறுப்பு நாடுகளில் 147 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன.





