60 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.நா கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் சிரிய ஜனாதிபதி

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா, ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு வருகை தந்துள்ளார்.
டிசம்பர் 2024ல் பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நாவின் 80வது சபை அமர்வில் அல்-ஷாரா கலந்து கொள்ளவுள்ளார்.
இந்த அமர்வில் அமைதி மற்றும் பாதுகாப்பு முதல் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு வரையிலான முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
1967ம் ஆண்டு மறைந்த ஜனாதிபதி நூரெடின் அல்-அட்டாசிக்குப் பிறகு பொதுச் சபையில் உரையாற்றும் முதல் சிரிய ஜனாதிபதி அல்-ஷாரா ஆவார்.
சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் கூடும் சபையின் உயர்மட்ட வாரத்தில் இணைந்த முதல் சிரியத் தலைவரும் இவர் ஆவார்.