ஐரோப்பா

ரயில் தண்டவாளங்களை தாக்கிய உக்ரைன் படையினர் – மூன்று பேர் பலி!

உக்ரைனின் சிறப்பு படைகள் ரஷ்யாவின் ரயில் தண்டவாளங்களில் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரேனிய எல்லையிலிருந்து சுமார் 120 மைல் தொலைவில் உள்ள ஓரியோலில் உள்ள ரயில் பாதைகளில் இந்த தாக்குதல் சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகில் ஒரு டீசல் என்ஜின் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல்  காலியான எரிபொருள் தொட்டிகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலும் தடம் புரண்டுள்ளது.

இதில்  வெடிகுண்டை அகற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய காவலரின் மூன்று உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய ரயில் போக்குவரத்தை சீர்குலைக்கும் “தனித்துவமான சிக்கலான” நடவடிக்கைக்கு அவர்கள் பின்னணியில் இருந்ததாக உக்ரேனிய இராணுவ வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!