உதவி இறப்பு முறையை சட்டப்பூர்வமாக்க வாக்களித்த ஸ்லோவேனியா பாராளுமன்றம்

ஸ்லோவேனியாவின் பாராளுமன்றம், நோய்வாய்ப்பட்ட பெரியவர்களுக்கு தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் உரிமையை வழங்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
சட்டமியற்றுபவர்கள், ஆதரவாக 50 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளை வழங்கி சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.
மனநோயால் ஏற்படும் தாங்க முடியாத துன்பம் ஏற்பட்டால் உதவியால் இறக்கும் உரிமை கிடைக்காது என்று ஸ்லோவேனியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த ஆலோசனை வாக்கெடுப்பில், ஸ்லோவேனியாவில் 55 சதவீத மக்கள் உதவியால் தற்கொலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த மசோதாவை ஆதரித்த ஆளும் சுதந்திர இயக்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் தெரேசா நோவக், “இறப்பதற்கு உதவுவதற்கான உரிமை மருத்துவத்திற்கான தோல்வியைக் குறிக்காது” என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.