ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு வந்த கொலை மிரட்டல்

ஈரானில் பெண்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்திற்காக 2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஈரானிய ஆர்வலர் நர்கஸ் முகமதிக்கு தெஹ்ரானிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் பெரும்பகுதியை சிறைக் காவலில் கழித்த முகமதி, டிசம்பர் மாதம் தெஹ்ரானின் எவின் சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விடுவிக்கப்பட்டார், அவரது சட்டக் குழு எந்த நேரத்திலும் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று பலமுறை எச்சரித்தது.

நோர்வே நோபல் குழுத் தலைவர் ஜோர்கன் வாட்னே ஃப்ரைட்னஸ் ஒரு அறிக்கையில், முகமதியிடமிருந்து ஒரு “அவசர தொலைபேசி அழைப்பு” வந்தது, அதில் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

முகமதி மற்றும் “விமர்சனக் குரல் கொண்ட அனைத்து ஈரானிய குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து “ஆழ்ந்த கவலை” கொண்டுள்ளதாகக் குழு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்களின் உயிரை மட்டுமல்ல, அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்க அதிகாரிகளை அழைக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content