ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித கைது செய்யப்பட வாய்ப்பு

ஊழல் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட பின்னர், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் (CFHC) முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அப்போதைய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் ராஜித சேனாரத்ன, சம்பந்தப்பட்ட வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படுவார் என்று அவர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே, இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.