அமெரிக்காவில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய வெப்பம் – மக்கள் கடும் அவதி

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
பெருநகரங்களில் வாழும் மில்லியன்கணக்கான மக்கள் கடுமையான வெப்பத்தால் அவதிப்படுகின்றனர்.
சில பகுதிகளில் வெப்பநிலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது. வொஷிங்டனிலும் போஸ்டனிலும் வெப்பநிலை 38 பாகை செல்சியஸைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாகப் பதிவான அதிகபட்ச வெப்பநிலையைவிட அது 6 பாகை அதிகம் என்று அமெரிக்க தேசிய வானிலைச் சேவை தெரிவித்தது.
நியூயார்க்கில் வெப்பநிலை 37 பாகை செல்சியஸை எட்டும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளும் வரலாறு காணாத கடுஞ்சூட்டை எதிர்கொள்ளக்கூடும்.
(Visited 5 times, 5 visits today)