சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை : இடிந்த பாலத்தின் விளிம்பில் தொங்கிய லாரி!

தென்மேற்கு சீனாவின் குய்சோவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இடிந்து விழுந்த பாலத்தின் விளிம்பில் ஒரு லாரி தொங்கிக் கொண்டிருப்பதை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அவசர சேவைகளால் ஓட்டுநர் மீட்கப்பட்டதாகவும், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொழியும் கனமழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)