WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – அறிமுகமாகும் புதிய வசதி

WhatsApp செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என WhatsApp நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இன்று நம்மில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அனைவருமே WhatsApp பயன்படுத்துவதுண்டு.
இந்த WhatsAppஇல் நாளுக்கு நாள் புதிய அப்டேட்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் தற்போதும் ஒரு புதிய அப்டேட் அறிமுகமாக உள்ளது. அதன்படி WhatsApp செயலியில் நீங்கள் அனுப்பிய செய்திகளை 15 நிமிடத்திற்குள் திருத்தம் செய்யலாம் என WhatsApp நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)