ஹெராயினை விட 500 மடங்கு வலிமையான மருந்து

ஹெராயினை விட 500 மடங்கு அதிக செயல்திறன் கொண்டதாக நம்பப்படும் ஒரு மருந்து, இங்கிலாந்தின் லண்டனில் கவலைக்குரிய முக்கிய காரணியாக மாறியுள்ளது.
விருந்துக்கு வருபவர்களிடையே பிரபலமடைந்து வரும் நைட்சீன் என்ற கொடிய செயற்கை ஓபியாய்டு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஃபென்டானிலைப் (fentanyl) போலவே இருக்கும் இந்த மருந்து, சமீபத்திய இரண்டு மரணங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சிறிய அளவுகள் கூட ஆபத்தானவை என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மே 26 அன்று சவுத்தாலில் 28 வயது ஆணும் 20 வயது பெண்ணும் “திடீர் மரணம்” அடைந்தது குறித்து விசாரணை நடந்து வருவதாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
“பச்சை மாத்திரை வடிவில் சட்டவிரோதமான ஒரு பொருளை உட்கொண்ட பிறகு அந்த நபர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகளைத் தொடர்ந்து விசாரணை வந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட போதைப்பொருள் சோதனை தொண்டு நிறுவனமான தி லூப், மாத்திரைகளில் நிட்டாசீன்ஸ் எனப்படும் செயற்கை ஓபியாய்டுகள் இருப்பதாகக் தெறிவித்துள்ளது.
மாத்திரைகள் “ஹெராயினை விட 50 முதல் 500 மடங்கு வலிமையானவை”, மேலும் அவை ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் (ஆக்ஸிஸ்) போல இருக்கும்.