செய்தி விளையாட்டு

வெற்றி பேரணியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்மிருதி மந்தனா

ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக ஆர்சிபி அணி வென்றது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கோப்பை கிடைத்த மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள் சின்னசாமி திடலில் குவிந்தார்கள். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்காக ஆர்சிபி நிர்வாகம், விராட் கோலி, ஏபிடி தங்களது இரங்களை பகிர்ந்துகொண்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா தனது வருத்தத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பெங்களூரில் உயிரிழந்தவர்கள் செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களும் எனது அஞ்சலிகள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆர்சிபி அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தது ஸ்மிருதி மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி