இலங்கை: தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் துமிந்த திசாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

ஹேவ்லாக் டவுனில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பாக முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க 2025 ஜூன் 19 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கொழும்பின் திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது மே 23 அன்று துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டார்.
வெள்ளவத்தையில் உள்ள ஹேவ்லாக் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 தாக்குதல் துப்பாக்கி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர், அதன் பிறகு துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டன.