இலங்கையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவிற்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிரிபத்கொடையில் உள்ள அரசாங்க நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தை விட்டு விலகிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று (07) காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்ததால் அவரைக் கைது செய்ய திறந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னணியில் இது நடந்தது. நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் அமைச்சரை, வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)