இலங்கை

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்

கட்டுநாயக்க – ஹீனடியன – இஹல மெண்டிய பகுதியில் இன்று உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உந்துருளியில் வந்த இருவர் இன்று காலை 6 மணியளவில், குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து, அவரின் படுக்கையறைக்கு நேரடியாகச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

காயமடைந்தவர் 29 வயதுடைய காலிங்க உதார சதுரங்க எனத் தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், அவரது தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், தாயார் சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளதாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலுக்காக T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்த இளைஞன் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

காயமடைந்தவர், இதற்கு முன்னர் தனிநபர்களுக்கு வட்டிக்குக் கடன் வழங்கி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.

துப்பாக்கிதாரிகள் மினுவாங்கொடை பகுதிக்குத் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்