செய்தி விளையாட்டு

IPL Match 15 – ஐதராபாத் அணிக்கு 201 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 15ஆவது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் பேட் கமின்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டி காக், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டி காக் ஒரு ரன்னிலும், சுனில் நரைன் ஏழு ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

5ஆவது விக்கெட்டுக்கு வெங்கடேஷ் ஐயருடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது.

வெங்கடேஷ் அய்யர் 29 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 60 ரன்கள் குவித்தார்.

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் அடித்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!