இந்தியா

விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை

விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகவும். கடந்த டிசம்பர்.30-ல் விண்ணில் ஏவப்பட்ட 2 விண்கலன்கள், ஜனவரி.16. விண்வெளியிலேயே இணைக்கப்பட்டன.

இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சனையால் பிரிக்கும் பணி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன. இரண்டு விண்கலங்களை ஒன்றாக இணைத்து அவற்றை பிரிகின்ற சோதனையில் தற்போது இஸ்ரோ வெற்றி அடைந்துள்ளது.

இதற்கு இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சாதனை விண்வெளி நிலையம் அமைப்பது, ககன்யான், சந்திராயன் 4 திட்டங்களுக்கு வழிவகுக்கும் என ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

(Visited 14 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
Skip to content