கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் ஒன்பது சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சஞ்சீவ குமார சமரரத்னே எனப்படும் “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் மார்ச் 21 வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (07) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் மெய்நிகர் முறையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
(Visited 31 times, 1 visits today)