மலேசியாவில் காணாமல் போய் மூன்று நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட 77 வயது முதியவர்

பிப்ரவரி 3 ஆம் தேதி, டோம்போங்கன் மென்கடல் அருகே 77 வயது முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
கிராமவாசிகள் மதியம் 1:20 மணிக்கு லிண்டாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் அளித்தனர், இதைத் தொடர்ந்து ஒன்பது பேர் கொண்ட மீட்புக் குழு அங்கு விரைந்து வந்தது.
தீயணைப்பு வீரர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் போலீசார் பிற்பகல் 2:05 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து, ஒரு கிலோமீட்டர் தூரம் ஏறிய பிறகு உடலை மீட்டனர்.
முதியவரின் சடலம் மேல் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓடைக்கு அருகே முதியவர் தவறி விழுந்திருக்கலாம், மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)