இலங்கை

இலங்கை: குளிர்பான போத்தல்களின் மூடிக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

மருதங்கடவளையில் ஆன்லைன் விற்பனைக்காக குளிர்பான போத்தல்களின் மூடிக்குள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருதங்கடவல மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இணையவழி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சந்தேகநபர் வசம் இருந்த 104 பொதிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபர் தனது ஜாக்கெட் மற்றும் குளிர்பான போத்தல்களுக்குள் சாதுரியமாக போதைப் பொருட்களை மறைத்து வைத்திருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார் 5.25 கிராம் எடையுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்