இந்தியா

இந்தியாவில் குடிபோதையில் மணப்பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலையிட்ட மணமகன்

உத்தரப்பிரதேசத்தில் திருமணத்திற்கு குடிபோதையில் வந்த மணமகன், மணப்பெண்ணுக்குப் பதிலாக அவரது தோழிக்கு மாலை அணிவித்ததால் திருமணத்தை மணப்பெண் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பிப்ரவரி 22ஆம் திகதி பிரம்மாண்டமாக நடந்த திருமணவிழாவில் மணமகனும் மணமகளும் மாலை மாற்றிக்கொள்வதற்காக மேடைக்கு வந்தனர்.

குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பதிலாக மணமகளின் நெருங்கிய தோழிக்கு மாலை அணிவித்துவிட்டார். இதனால், கோபமடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்துமாறு தனது பெற்றோரிடம் கூறினார்.

திருமணம் நிறுத்தப்பட்டதோடு மணமகளின் தந்தை மணமகனின் குடும்பத்தினர் மீது வரதட்சனை துன்புறுத்தல், மான நஷ்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மணமகனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் காவல்துறையினர் அபராதம் விதித்தனர். மணமகன், அவரது தந்தை மற்றும் மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஐவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே