இலங்கையில் இன்றும் அதியுயர் வெப்பநிலை! பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

இலங்கையில் பல மாகாணங்களில் இன்றைய தினமும் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக வீடுகளில் உள்ள முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் வெளிப்படுவதைத் தவிர்க்கவும், குறிப்பாக உச்ச பகல் நேரங்களில் குளிர்ச்சியாக இருக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)