செய்தி

வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாக காரணம்

வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களின் அதிகரிப்பு பல காரணங்களால் உள்ளன. ஆனால் அதனை வளர விடக்கூடாது. தொடர்ந்து அந்த பாக்டீரியாக்கள் அதிகரித்தால் உடலுக்கு மிகப்பெரிய ஆபத்து. நமது வயிற்றில் இரண்டு வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. நல்ல பாக்டீரியா, அவை புரோபயாடிக்குகள் என்றும் அழைக்கப்படுகிறது.

இரண்டாவது கெட்ட பாக்டீரியா. வயிற்றில் பாக்டீரியாக்களின் சமநிலையின்மை ஏற்பட்டு கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரிக்கும்போது வயிற்று வலி, வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்கள் வளரும்போது, அது குடல் ஆரோக்கியத்தைப் மிக மோசமாக பாதிக்கும். இது புற்றுநோய் ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதனால் கெட்ட பாக்டீரியாக்கள் உடலில் அதிகரிக்க என்ன காரணம் என்பதை இங்கே பார்க்கலாம்…

மோசமான உணவுமுறை| அதிகப்படியான வறுத்த, பொரித்த, பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை மற்றும் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இந்த உணவுப் பொருட்களில் நல்ல பாக்டீரியாக்களுக்கு அவசியமான நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை.

ஆன்டிபயாடிக் | ஆன்டிபயாடிக் கெட்ட பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுகின்றன. ஆனால் இவை நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்தே கொல்லும். இதன் காரணமாக உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலைந்து கெட்ட பாக்டீரியாக்கள் வளரத் தொடங்குகின்றன.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் | மன அழுத்தம் குடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் குடல் இயக்கம் மற்றும் பாக்டீரியா சமநிலையை சீர்குலைத்து, கெட்ட பாக்டீரியாக்கள் வளர காரணமாகிறது.

தூக்கம் | நல்ல தூக்கம் இல்லாதது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது, இது குடலில் பாக்டீரியா ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும்.

மது மற்றும் புகைத்தல் | அதிகப்படியான மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் வயிற்றில் வீக்கம் மற்றும் பாக்டீரியாக்களின் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.

தண்ணீர் குடித்தல் | தண்ணீர் குடிக்காமல் இருப்பது குடல் திறனை பலவீனப்படுத்துகிறது, இது அழுக்கு பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். நாள் ஒன்றுக்கு உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கவும். தண்ணீர் போதுமான அளவு குடித்தால் மலச்சிக்கல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் வராது.

வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிப்பது எப்படி?

புரோபயாடிக்குகள் |புரோபயாடிக்குகள் (நல்ல பாக்டீரியாக்கள்) குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன. இவை குடலில் உள்ள பாக்டீரியாக்களின் சமநிலையை சரிசெய்ய உதவும். தயிர், பாலாடைக்கட்டி, மோர் போன்ற உணவுகளில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன, இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நார்ச்சத்து | வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு நார்ச்சத்து உணவு மூலமாகச் செயல்படுகிறது, அவை ஜீரணித்து பியூட்ரிக் அமிலத்தை உருவாக்குகின்றன, இது குடலுக்கு நன்மை பயக்கும். முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சியா மற்றும் ஆளி விதைகள் போன்ற விதைகளை உட்கொள்வது நல்லது.

தண்ணீர் | சரியான அளவு தண்ணீர் குடிப்பது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும், செரிமானத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது. தண்ணீர் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் குடல்களை நீரேற்றமாக வைத்திருக்கிறது.

சர்க்கரை | அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இவற்றைக் குறைப்பதன் மூலம், வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

புளித்த உணவு | புளித்த உணவுகளில் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே, தயிர், மோர், பழைய சாதம் தண்ணீர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.

இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் | பூண்டு, இஞ்சி, மஞ்சள் மற்றும் துளசி போன்ற இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்துகின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை | வயிற்றில் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஒரு கடுமையான பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் அதை சீரான உணவு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் இயற்கை முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். புரோபயாடிக்குகள், நார்ச்சத்து, சீரான உணவு, நீரேற்றம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை ஆகியவை வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும், குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. உங்களுக்கு ஏதேனும் கடுமையான பிரச்சனை இருந்தால், மருத்துவரை அணுகுவது முக்கியம்.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content