வட அமெரிக்கா

அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றம் ஒத்திவைப்பு : ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

காஸாவில் சிறை வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் சனிக்கிழமைக்குள் (15) விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு நிகழவில்லை எனில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிணைக்கைதிகள் அனைவரும் அந்தக் காலக்கெடுவுக்குள் விடுவிக்கப்படாவிட்டால் இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தத்தை தாம் ரத்து செய்யவேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

அடுத்தக்கட்ட பிணைக்கைதி பரிமாற்றத்தை ஒத்திவைக்கப்போவதாக ஹமாஸ் போராளிக்குழு மிரட்டியதைத் தொடர்ந்து, டிரம்ப் அந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹமாஸின் நடவடிக்கை அத்துமீறிய செயல். போர்நிறுத்தம் தொடர்பாக இனி என்ன நிகழ வேண்டும் என்பதை இஸ்ரேலின் முடிவுக்கே விடவேண்டி வரும்.“என்னைப் பொறுத்தவரை, எல்லாப் பிணைக்கைதிகளும் சனிக்கிழமை 12 மணிக்குள் விடுவிக்கப்படவில்லை எனில், போர்நிறுத்தத்தை விலக்கிக்கொள்ள நான் உத்தரவிடுவேன். அதன் பின்னர் எல்லாவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படும்.

“ஒருவர், இருவர் என்றில்லாமல் அனைத்துப் பிணைக்கைதிகளும் காஸாவில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எங்களது விருப்பம். போர்நிறுத்தத்தை இஸ்ரேல் இப்போதே மீறமுடியும் என்று நான் கருதினாலும் சனிக்கிழமை 12 மணி வரை கெடு விதித்துள்ளேன்,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு காலக்கெடு விதித்திருப்பது குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மோசமான விளைவுகள் என்ன என்பதை டிரம்ப் விரிவாகச் சொல்லாவிட்டாலும், அவை என்னவென்று ஹமாஸுக்குத் தெரியும் என்றார்.

“இந்த விவகாரத்தில் அமெரிக்கப் படைகளின் தலையீடு இருக்காது என்கிறீர்களா,” என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்,” என்றார் அவர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்